படரும் பண்பாடு … மயானக் கொள்ளைத் திருவிழா
கோ.செங்குட்டுவன்
கோ.செங்குட்டுவன்
இது ஒரு வரலாற்று முரண் நகைதான்…
எவ்வளவுதான் பகுத்தறிவின் பார்வையோடு, பெண்ணியச் சிந்தனைகளைத் தூவினாலும்,
இதோ, அங்காள பரமேஸ்வரியாக, இன்னும் பல பெண் தெய்வங்களாக ஆடி வரும் கூட்டம்.
மருள் வந்து ஆடிவருவதோடு மட்டுமல்ல, அருள்பாலிக்கவும் செய்கிறார்கள்.
மண்ணின் மணத்தோடு இன்று (08.03.16) மாலை, விழுப்புரத்தில் நடந்த மயானக் கொள்ளைத் திருவிழா.
ஆக்ரோஷமாக ஓடிவரும் ரேணுகா அங்காள பரமேஸ்வரி, மயானத்திற்குள் வந்தவுடன் சாந்தமடைந்து, பின்னர் கோயிலுக்குத் திரும்புகிறாள்.
கூடியுள்ள பெருங்கூட்டமோ, அம்மனைத் தரிசித்ததோடு மட்டும் நில்லாமல், தம் முன்னோரையும் நினைவுகூரத் தவறவில்லை.
காலம் சென்றவர்களின் சமாதிகள், அவரவர் சக்திக்கேற்றவாறு அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகள். கொழுக்கட்டை, சுண்டல், பொறி கடலை, இனிப்புப் பலகாரங்கள்.
இவற்றின் ஊடாக சிலருக்கு பாக்கெட் சாராயமும், குவார்ட்டர் பாட்டிலும் படையலில் முக்கிய இடம் வகித்ததையும் பார்க்க முடிகிறது.
சங்ககால தமிழர்கள் கள் குடித்தனர். அவர்களது இறுதிச் சடங்கில் கள்ளும் இடம் பெற்றது. அவர்களைப் புதைக்கும்போது, உடன் வைக்கப்பட்டது கள்.
நடுகற்களிலும் கூட கள் கலயங்கள் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
வரலாறு தொடருகிறது… பண்பாடு படருகிறது… மயானக் கொள்ளைத் திருவிழாக்களில்..!
--- கோ.செங்குட்டுவன்






No comments:
Post a Comment